விடுதியில் தொழிலதிபர் உயிரிழப்பு

விடுதியில் தொழிலதிபர் உயிரிழப்பு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர். புரம் பகுதியில் துரைவாணி நகரைச் சேர்ந்தவர் நரசிம்மன்(42). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு மணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் நேற்று முன் தினம் கிருஷ்ணகிரி வந்தார். அவர், விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கியிருந்த அறையின் கதவு மாலை வரை திறக்கப்படாத நிலையில் விடுதி மேலாளர் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், போலீஸார் நேரில் சென்று மாற்றுசாவி மூலம் அறையை திறந்துபார்த்தனர்.

அப்போது, அறைக்குள் படுக்கை யில் உயிரிழந்த நிலையில் நரசிம்மன் கிடந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது அவரது உயிரிழப்புக்கு வேறு காரணம் உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in