விழுப்புரத்தில் அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

விழுப்புரத்தில் அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
Updated on
1 min read

விழுப்புரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மைதானத்தில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, மாலை 4.45 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் மத்திய உள்துறை அமைச் சர் அமித்ஷா வந்தார். அவருக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் அவரது தலைமையில் மாநில, மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் சிங்காரவேலர் சிலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் ஜானகிபுரம் மைதானத்தில் மாநில தலைவர் முருகன் தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் கலிவரதன் (விழுப்புரம்), பாலசுந்தரம் (கள்ளக்குறிச்சி) ஆகி யோர் வரவேற்றனர்.

பாஜக நிர்வாகி வானதி சீனுவாசன், மேலிட பொறுப்பாளர் ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில பொது செயலாளர் ராகவன், துணைத் தலைவர் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டஅமைப்பு செயலாளர் குண சேகரன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அறிவுசெல்வன், சிவதியாகராஜன்,சுகுமார், தாஸ சத்யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் இருந்து நேற்றிரவு 7.30 மணிக்கு கார் மூலம் அமித்ஷா சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in