Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM
தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று பகல் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம்தோறும் வாகன கண்காணிப்பு, பணம் எடுத்துச் செல்வோரை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அனைத்து கட்சிகளும் கூட்டணி,தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அரசு நிர்வாகமும்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இத னால், தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT