Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்

வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் உள்ள மதுராநல்லூரைச் சேர்ந்தவர்கள் எத்திராஜ்(68), சிவசங்கரன்(78). இவர்கள் இருவரும் தங்கள் விளைநிலத்தை பார்க்க, இருசக்கர வாகனத்தில் சென்றனர். தாம்பரம் செல்லும் சாலையைக் கடக்க முயன்றபோது பின்னால் வந்த லாரி இவர்களது இருசக்கர வாகனத்தை மோதியதில் எத்திராஜ் உயிரிழந்தார். சிவசங்கரன் பலத்த காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவசர ஊர்தி மூலம் சிவசங்கரனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவசங்கரன் உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பாக வாலாஜாபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x