தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல்

தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல்
Updated on
1 min read

உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொதுவுடைமைவாதியுமான தா.பாண்டியன் மறைவு கேட்டு வருத்தம் அடைந்தேன். ஏழை தொழிலாளர்களின் தலைவனாகவும், சிறந்த பேச்சாற்றல் கொண்டவராகவும் இருந்து மறைந்தவர் தா.பாண்டியன். அவரது மறைவு உழைக்கும் வர்க்கத்தினருக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், தமிழக விவசாயிகள் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in