குன்னூரில் கல் குவாரியால் தேனீ வளர்ப்பு பாதிப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

குன்னூரில் கல் குவாரியால் தேனீ வளர்ப்பு பாதிப்பு  குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
Updated on
1 min read

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

பெரியாறு அணையில் திட்டமிடாத தண்ணீர் திறப்பால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி களில் ஒருபோக நெல் சாகுபடி மட்டும் நடக்கிறது. மலைமாடுகளுக்கு வனப்பகுதி மேய்ச்சல் அனுமதிச்சீட்டு தாமதமின்றி வழங்க வேண்டும். முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தில் சண்முகசுந்தரபுரத்தையும் சேர்க்க வேண்டும். அம்மச்சியாபுரம், குன்னூர் பகுதி கல் குவாரி வெடிச் சத்தம் காரணமாக தேனீ வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in