Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு

சென்னை

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மார்ச் 7-ம் தேதி நடைபெறவிருந்த பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து மார்ச் 7-ம் தேதி நடத்தப்படவிருந்த நமது கட்சியின் பொதுக்குழுவும், மார்ச் 14-ம்தேதி திருச்சியில் நடைபெறுவதாக இருந்த மாநில மாநாடும் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி உட்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x