Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணை யம் இதற்கான அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். காவல் மற்றும் வருவாய்த் துறைகளில் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் வாணியம் பாடிக்கும், அங்கு பணியாற்றி வந்த சிவப்பிரகாசம் திருப்பத்தூர் வட்டாட்சியராகவும், ஆம்பூர் வட்டாட்சியர் பத்பநாபன் திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நலம் மற்றும் ஆட்சியர் அலுவலக மேலாளர் (நீதியியல்) பணியும் கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆம்பூர் வட்டாட்சியராகவும், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் பிரியா திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பிரிவு வட்டாட்சியராகவும், திருப்பத்தூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது), பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் உமா ரம்யா திருப்பத்தூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து வட்டாட்சியர்களும் உடனடியாக பணியில் சேரவேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x