Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், வார விடுமுறை, சுழற்சி முறையில் பணியிட மாறுதல், விற்பனை நேரத்தை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டாஸ்மாக் ஊழிய சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தனசேகரன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், தொமுச மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல், காஞ்சிபுரம் பெரியார் தூண் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அரசு தலைமை தாங்கினார்.

டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் டாஸ்மாக் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் அறிவழகன், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரகாசம், டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள், டாஸ்மாக் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x