Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

மாவட்ட சிலம்பாட்ட போட்டிகள்

விருதுநகரில் மாவட்ட சிலம் பாட்டக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கோகுலம் எம்.தங்கராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஜெய்சங்கர், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கச் செயலாளர் ஹரி பாஸ்கரன், பூபால கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x