தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

நலவாரிய அட்டைகளை புதுப்பிக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் சிஐடியு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நலவாரிய அட்டைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விடுபட்ட தொழிலாளர்களுக்கு கரோனா கால நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம்வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 2019-2020, 2020 - 2021-ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு தீப்பெட்டி சங்கத் தலைவர் மோகன் தாஸ் தலைமை வகித்தார்.

சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணவேணி பேசினார். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன், நகரக்குழு உறுப்பினர் அந்தோணி செல்வம், ஆனந்த், மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் ராமசுப்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in