அரக்கோணம் அருகே நள்ளிரவில் மின் வேலியில் சிக்கிய தந்தை, மகன் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே நள்ளிரவில் மின் வேலியில் சிக்கிய தந்தை, மகன் உயிரிழப்பு
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்து கிடப்பதாக நேற்று காலை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன், கிராமிய காவல் ஆய்வாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உயிரிழந் தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாக்கியராஜ் (37), அவரது மகன் அருண்குமார் (14) என தெரியவந்தது.

இருவரும் கோணலம் கிராமத்தில் உள்ள சந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் தங்கியிருந்து கூலி தொழில் செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இருவரும் வெளியே சென்றபோது, விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in