Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

என்எல்சியில் 406 காலிப்பணியிடம் முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

நாமக்கல்

நெய்வேலி என்எல்சியில் காலியாக உள்ள பணியிடங்களில் முன்னாள் படைவீர்கள் நிரப்பப்பட உள்ளனர், என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெய்வேலியில் இயங்கிவரும் என்எல்சி நிறுவனத்தில் மொத்தம் 406 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், 12 எஸ்/இ பணியிடம், 29 ஏஎஸ்/இ பணியிடம், 88 ஹெச்சி, ஜிடி பணியிடம், 277 சிடி, ஜிடி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் படைவீரர்கள் நிரப்பப்பட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 50 வயதிற்கு குறைந்த முன்னாள் படைவீரர்கள், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் igss@cisf.gov.in என்ற முகவரிக்கு மார்ச் 15-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விவரம் அறிய நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x