Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

திருச்செந்தூர் மாசித்திருவிழா சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி வீதி உலா

திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் நேற்று பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சார்த்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 11.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

10-ம் திருநாளான நாளை (26-ம்தேதி) காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x