Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

மூதாட்டி உயிரிழப்பு

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூப்பன் என்பவரின் மனைவி ராமாயம்மாள் (80). கணவர் ஏற்கெனவே இறந்துவிட, மகள் வெளியூரில் வசிக்க, இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது வீடு தென்னங்கீற்றால் அமைக்கப்பட்டிருந்தது. உணவு சமைக்க நேற்று ராமாயம்மாள் விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, பக்கவாட்டில் இருந்த தென்னங்கீற்றில் தீப்பிடித்துள்ளது. தொடர்ந்து வேகமாக பரவி குடிசை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. வீட்டுக்குள் சிக்கிய ராமாயம்மாளும் தீயில் கருகி உயிரிழந்தார். குன்னத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x