திருப்பூரில் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் தீக்குளித்த  தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பூரில் தீக்குளித்த பனியன் நிறுவன தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பனியன் தொழிலாளி அசோக்குமார் (30). இவருக்கு மனைவி லட்சுமி, குழந்தைகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்தால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால், தாய் வீட்டுக்கு லட்சுமி சென்றுவிட்டார். மனஉளைச்சலில் இருந்த அசோக்குமார், கடந்த 17-ம் தேதிவீட்டில் இருந்த மண்ணெண் ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அருகே வசிப்பவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in