Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

17 இடங்களில் திருடியவர் கைது ராயபுரத்தில் 280 பவுன் திருட்டு

மதுரவாயல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 17 இடங்களில் கைவரிசை காட்டிய திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரவாயல், அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 37 பவுன் நகைகள் திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீஸார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜன் என்ற காமராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள 56 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர் மீது பல காவல் நிலையங்களில் 17 திருட்டுவழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

280 பவுன் திருட்டு

ராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த தனியார்நிறுவன மேலாளரான சியாமளாஎன்பவரது வீட்டில் 280 பவுன்திருடு போனது.இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x