விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 560 பேர் கைது

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 560 பேர் கைது

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

விக்கிரவாண்டியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 137 பேர், விழுப்புரத்தில் சங்க மாநில குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திய 84 பேர் உட்பட மாவட்டத்தில் 560 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in