Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டம்

கோவில்பட்டி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உருளைகுடி, சத்திரப்பட்டி, செமபுதூர்,குலசேகரபுரம், பாண்டவர்மங்கலம், டி.சண்முகபுரம், முடுக்குமீண்டான்பட்டி கிராமங்களில் ரூ.74 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல், ரூ.5 லட்சம் மதிப்பில் ஈராச்சி காளியம்மன் கோவில் தெருவில் சிறிய பாலம், 2 மீட்டர் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ.5 லட்சம், ரூ.1.60 லட்சத்தில் வில்லிசேரி கிராமத்தில் குடிநீர் குழாய் அமைத்தல், கடலையூர், ஈராச்சி,கீழஈரால், வில்லிசேரி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு ஒழிப்பு பணி தற்காலிக மஸ்தூர் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் ரூ.3.96 லட்சம் அனுமதிப்பது உள்ளிட்ட ரூ.97.43 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x