Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி நகர கோட்டம் கீழுர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செய்யப்படும் கிருஷ்ணராஜபுரம் உயரழுத்த மின் பாதையில் மின் கம்பிகளை தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அ.சண்முகபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர், சேதுபாதை சாலை வட பகுதி ஆகிய பகுதிகளில் இன்று (பிப். 24) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT