Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

காரைக்கால் அருகே லாரி மோதி தம்பதி உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டம் பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்(33) மற்றும் அவரது மனைவி வீரலட்சுமி(35) ஆகிய இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில், காரைக்காலிலிருந்து பட்டினச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நிரவி ஹைவே நகரை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த வீரலட்சுமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவபெருமாள், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மரிய கிறிஸ்டியன்பால், உதவி ஆய்வாளர் மனோகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, டேங்கர் லாரி ஓட்டுநரான நாகூரைச் சேர்ந்த சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x