Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஜேம்ஸ். இவருக்கும், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுர் முகமது ரியாஸ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 17-ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. அன்றைய தினம் இரவு ஜேம்ஸ், அவரது நண்பர்களுடன் முகமது ரியாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது முகமது ரியாஸ் வெளியில் சென்ற நிலையில், அவரின் தாய், தந்தை முகமது முஸ்தபா, சகிதாபானு ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு சென்றனர்.
திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு கார்த்தி (20), செல்வகுமார் (22), வினோத் (22), சரவணகுமார் (23) ஆகிய 4 பேரை பிடித்தனர். விசாரித்ததில், முகமது ரியாஸ் யார் என்பது தெரியாமல், அவரின் தந்தை, தாயாரை வெட்டியது தெரிந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT