மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சாந்தி, செயலர் ஸ்டெல்லா ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, "காலமுறை ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களாக்குதல், குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்குதல், பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.

பின்னர், தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 640 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர்

உதகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in