Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

கூடுதல் நீதிமன்றங்கள் திறப்பு

திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், பி.டி.ஆசா ஆகியோர் பேசினர்.

திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி வரவேற்றார். ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு 737 சிவில் வழக்குகள், கூடுதல் மகிளா நீதிமன்றத்துக்கு 187 வழக்குகளும் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x