Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து உயர்வு

கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் மழை இல்லாததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து கடந்த 2-ம் தேதி முதல் நின்றது.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மற்றும் நேற்றுமுன்தினம் தென் பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 162 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து வலது மற்றும் இடது புறக்கால்வாய் வழியாக 2-ம் போக பாசனத்துக்கு விநாடிக்கு 162 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 47.35 அடிக்கு தண்ணீர் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x