Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விழுப்புரம், கடலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்துவிழுப்புரம், கடலூர் மாவட்டங் களில் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் புகழேந்தி தலைமையில் திமுகவி னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இதே போல் கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் வெ.கணேசன் தலைமையில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொமுச பேரவைச் செயலாளர் மு.சண்முகம், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் ராமு, குருசரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எரிபொருள் விற்பனை விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x