Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

கருத்தரிப்பு மருத்துவமனைக்கு சீல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் மதுரை சாலையில் கருத்தரிப்பு மைய மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இது அரசு அனுமதி இல்லாமலும், உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் செயல்படுவதாக மாவட்ட சுகாதாரத் துறையினருக்குப் புகார் வந்தது.

இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர். இதில் மருத்துவமனை அரசு அனுமதி இன்றியும், தகுதியான மருத்துவர்கள், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமலும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x