Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
நாமக்கல்
நாமக்கல் துணை மின் நிலையத்தில் இன்று (23-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாமக்கல் டவுன், நல்லிபாளையம், அய்யம் பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, வீசாணம், ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது, என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி
தருமபுரி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பீடருக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (23-ம் தேதி) புதிய மின்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணாபுரம், புழுதிகரை, பி.மோட்டுப்பட்டி, சவுளுப்பட்டி, ஒன்னியம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய தருமபுரி கோட்ட செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT