Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

வள்ளம் மீது விசைப்படகு மோதி மீனவர் மாயம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பொழிக்கரையைச் சேர்ந்த கோர்தாமஸ் ரூபர்ட் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் (62) உட்பட 6 பேர் நேற்று முன்தினம் இரவு பொழிக்கரை கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர்.அவ்வழியாக வந்த விசைப்படகு மோதியதில் வள்ளத்தில் இருந்த 6 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில், ஜோசப் தவிர மற்ற 5 பேரையும், விசைப்படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றினர். மெரைன் போலீஸாரும், மீனவர்களும் நேற்று படகில் சென்று ஜோசப்பை தேடும்பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x