Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

கருவேலங்காட்டில் 90 கிலோ கஞ்சா பதுக்கல்

நாகை மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த பெரியகுத்தகை அக்கரை பள்ளிவாசல் கடற்கரையின் தென்பகுதியில் உள்ள கரு வேலங் காட்டில் நேற்று முன்தினம் இரவு 3 பேர், 3 மூட்டைகளுடன் நடந்து சென்றதாக கிடைத்த தகவலின் பேரில், க்யூ பிராஞ்ச் போலீஸார் அங்கு சென்று, சோதனை நடத்தினர்.

இதில், கருவேலங்காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மூட்டைகளை போலீஸார் கைப்பற்றி, பிரித்து பார்த்தனர். ஒவ் வொரு மூட்டையிலும் தலா 2 கிலோ எடையுள்ள 15 பார்சல்கள் வீதம், 3 மூட்டைகளில் 45 பார்சல்களில் 90 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவை வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டன. இதுதொடர்பாக, வேதாரண்யம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கஞ்சா மூட்டைகளை மறைத்து வைத்தது யார்? இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக வைக்கப் பட்டிருந்தனவா என்பன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x