Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தேமுதிக வலியுறுத்தல்

தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தல் ஆலோசனைக்கூட்டம் ஓசூரில் நடந்தது. ஓசூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சரவணன் வரவேற்று பேசினார்.

இதில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதில் தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளர் வி.எஸ்.மணிகண்டன், ஓசூர் மாநகர சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளர் கே.ஆர். சீனிவாசமூர்த்தி உட்பட மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமன்றி இந்திய அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தேமுதிக சார்பில் வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அடங்கிய போராட்டத்துக்கு தேமுதிக துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x