Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM
காரைக்கால் மாவட்டம் நிரவி சிங்காரவேல் பிள்ளைத் தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மகள் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், மகளுக்கு சொந்தமான வீட்டில் நடராஜன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய நடராஜன், நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறக் கதவு திறந்துகிடந்தது. மேலும், வீட்டுக்குள் அலமாரியில் இருந்த 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன. இதுகுறித்து நிரவி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT