Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

917 பயனாளிகளுக்கு ரூ.5.61 கோடி மதிப்பில்நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறையில் உள்ள திருமண மண்டபத்தில், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:

வருவாய்த் துறை சார்பில் 269 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 21 பேருக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, 32 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 51 பேருக்கு விதவை உதவித்தொகை, ஒருவருக்கு கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை, 2 பேருக்கு இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட தோப்புத் துறையைச் சேர்ந்த 917 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அரசின் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டு, அதற்கு விண்ணப்பித்து பயன்பெற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, வட்டாட்சியர் முருகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x