Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM
காரைக்கால் மாவட்டம் பத்தக்குடி அரசு தொடக்கப் பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட் டம் மற்றும் பூந்தோட்டம் திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பி.முருகன், சிறப்பு அழைப் பாளராகக் கலந்துகொண்டு, தோட்டத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி பொறுப்பாசிரியர் ஜி.வசந்தகுமார் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். பள்ளி ஊழியர் கே.ஞானவேல் ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வி.வெங்க டேசன் நன்றி கூறினார். இதில், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT