Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி ஒன்றியம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய் திருந்த 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டைகள் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள், இலவச வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக பொருளாளர் ராஜா, ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், நகர அவைத் தலைவர் சுபான், கூட்டுறவு சங்கத்தலைவர் சதீஷ்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT