Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,897-ஆக உயர்ந்தது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் 8 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,687ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,626-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 19,461-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 19,136 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x