ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர் உயிரிழப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த  உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த உதவி தோட்டக் கலைத் துறை அலுவலர் நேற்று உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் மேலநெமிலி மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உதவி தோட்டக்கலைத் துறை அலுவலராக பணிபுரிந்து வந்தார். திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் தோட்டக்கலைத் துறை சார்பில் நேற்று தணிக்கை பணிகள் நடைபெற்றன. இதற்காக, ஆட்சியர் அலுவலகத்துக்கு கோப்புகளுடன் நேற்று காலை வந்திருந்தார். திடீரென வளாகத்தில் மயங்கி விழுந்தார்.

அங்கிருந்த தோட்டக்கலைத் துறை மற்றும் ஆட்சியர் அலுவலகஊழியர்கள் அளித்த தகவலின்பேரில், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வீரபாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். குடும்பத்தினர் திருவண்ணாமலையில் வசிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in