Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

உளவியல் நிபுணர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் மற்றும் உளவியல் நிபுணர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு ஆண்கள் 2 பேரும்,பெண் ஒருவரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ள 3 பணியிடங்களுக்கு விருப்பமுள்ள உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை பிப்.28-க்குள் கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் இல்லம், 32, சி.தாத்திமேடு, சாலபோகம் தெரு, காஞ்சிபுரம் - 631 502 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x