மரக்காணம் அருகே 35 பவுன் நகை கொள்ளை

மரக்காணம் அருகே 35 பவுன் நகை கொள்ளை
Updated on
1 min read

மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்மகன் குமார். இவரது குழந் தைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் உடல் நிலை சரியிலாத காரணத்தினால் குமார் மற்றும் அவரது குடும்பத்தார் நேற்று முன்தினம் புதுச்சேரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை அழைத்துச் சென்றுள் ளனர்.

நேற்று காலை பக்கத்து வீட்டுக்காரர்கள், குமாரின் வீட்டை பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே, குமாரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றி ருந்தனர். இது குறித்து குமார் மரக்காணம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் மரக்காணம் பழனி ஆண்டவர் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப் பட்டது. மேலும், மரக்காணம் பாண்டி ரோடு தேவராஜ் கிராமணிதெருவில் உள்ள இரண்டு வீடுகளில் 4 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தப்பட்ட 2 லாரிகளில் இருந்து பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன.

இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in