கோகுல மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோகுல மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி வேலூரில் கோகுல மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோகுல மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் முனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளிகொண்டா நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். யாதவர்களுக்கு 16 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இட ஒதுக்கீடு கோரி முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in