மயில்களை சுட்டு வேட்டையாடிய இருவர் கைது

மயில்களை சுட்டு வேட்டையாடிய இருவர் கைது
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் சோழபாண்டியில் நேற்று அதிகாலை தலையாமங்கலம் போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த திருமக்கோட்டை திரு மேனிஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த இளங்குமரன்(35), முரு கேசன்(19) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் 3 மயில்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரியவந்ததால் இருவரும் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in