பாலியல் தொந்தரவுதொழிலாளிக்கு சிறை

பாலியல் தொந்தரவுதொழிலாளிக்கு சிறை
Updated on
1 min read

சாயல்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து(33). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் துரைராஜுக்கு தகவல் கிடைத்தது. அவரது புகாரின் பேரில் மாரிமுத்துவை கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் மாரிமுத்துவுக்கு இயற்கை மரணம் அடையும்வரை சிறைத் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.1.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in