Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு 11 பேர் இடத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலுக்கு சொந்த மான இடத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த 11 பேர் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கோயில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமானதும், இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்டதுமான புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.

இந்த கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் வகையில், கோயிலுக்கு அருகே 14,390 சதுர அடி பரப்பளவில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த 11 பேர் மீது இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தஞ்சாவூர் மண்டல அறநிலையத் துறை இணை ஆணையர் முன்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

இதையடுத்து, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்கள் 15 தினங்களுக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் விளம்பரத் தட்டி மூலம் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் கூறும்போது, ‘‘அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயிலுக்குரிய இடங்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே தெற்கு முஸ்லிம் தெரு பகுதியில் 14,390 சதுர அடி பரப்பளவில் குடியிருந்து வந்த 11 பேர், கோயில் இடத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் விதமாக அவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. அறநிலையத்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் 15 தினங்களுக்குள் அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல, கோயிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளும் ஒவ்வொன்றாக மீட்கப்படும். இதில் மதம், இனம் என்ற எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x