

இது குறித்து தினகரன் கூறியதாவது:
எனது தந்தை அழகு(59), கடந்த 27 ஆண்களாக சவுதி அரேபியாவில் சாலை கிளீனிங் வேலை செய்து வந்தார். 29.11.2020 அன்று எனது தந்தை இறந்துவிட்டதாக உடன் பணியாற்றியவர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். மேலும் எனது தந்தை தூக்கிட்டு இறந்ததற்கான புகைப்படத்தையும் அனுப்பினர்.
அதையடுத்து நான் கடந்த ஆண்டு டிசம்பர் 5, ஜனவரி 18 ஆகிய தேதிகளில் தந்தை உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தேன். நடவடிக்கை இல்லாததால் ஆட்சியரிடம் இன்று மீண்டும் மனு அளித்தேன் என்றார்.