Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM

வாகனச் சோதனையின்போது காவலரை தாக்கிய காவலர் உட்பட 3 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் பஜார் போலீஸார் நேற்று முன்தினம் மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை காவலர் இளமாறன் தடுத்தார்.

அப்போது அவர்கள் காவலர் இளமாறனை தகராறு செய்து தாக்கினர். இதில் காயமடைந்த அவர், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பஜார் போலீஸார் மோட்டார் சைக்கிளில் வந்த கூரியூரைச் சேர்ந்த சிவமுருகன், ரபீக் முகம்மது, பிலால் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதில் ரபீக் முகம்மது பெருநாழி காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இவர் மீது ஏற்கெனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவர் பணிக்குச் செல்லாமல் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x