விஷம் குடித்து காதலன் உயிரிழப்பு காதலிக்கு சிகிச்சை

விஷம் குடித்து காதலன் உயிரிழப்பு காதலிக்கு சிகிச்சை
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கன்னிமெய்க்கான்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் அஜித்(18). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகள் சிவரஞ்சனி(19). கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர். இதையடுத்து, கத்தாளப்பட்டி அரசமரத்தான் கோயிலில் அஜித், சிவரஞ்சனி நேற்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருவரும் விஷமருந்தினர். அஜித் உயிரிழந்தார். சிவரஞ்சனி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். வெள்ளியணை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in