ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,861-ஆகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே ஒருவருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,670-ஆகவும் அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,614-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

கடந்த 11 மாதங்களாக கரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்த நிலையில், முதன் முறையாக நேற்று பாதிப்பு பதிவாகாத மாவட்டமாக இருந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in