உளுந்தூர்பேட்டையில் திடீர் மின்தடையால் பாதிப்பு

உளுந்தூர்பேட்டையில் திடீர் மின்தடையால் பாதிப்பு
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் மின்தடை ஏற் பட்டது.

உளுந்தூர்பேட்டையை அடுத்த பில்லூர் துணை மின்நிலையத்திலிருந்து திருவெண்ணெய்நல்லூர், பிள் ளையார்குப்பம் பகுதிகளுக்கு உயர் மின்கோபுரம் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மின்கோபுரத்திலி ருந்து செல்லும் மின்கம்பிகள் நேற்று அதிகாலை செம்மணங்கூர் சாலையில் திடீரென அறுந்துவிழுந்தது. இதனால் உளுந்தூர் பேட்டை சுற்றுவட்டாரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பகுதி யில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று அறுந்து விழுந்த கம்பியை சீரமைத்தனர். பிற்பகலில் மீண்டும் மின் இணைப்பு சகஜ நிலைக்குத் திரும்பியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in