Published : 15 Feb 2021 03:13 AM
Last Updated : 15 Feb 2021 03:13 AM

புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,854-ஆக உள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்குபாதிப்பு எண்ணிக்கை 15,669-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத் தூர் மாவட்டத்தில் 2 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,612-ஆக உயர்ந் துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,426-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x