வேளாண் சட்டங்களை திரும்பப் பெற காங்கிரஸ் கூட்டத்தில் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற காங்கிரஸ் கூட்டத்தில் வலியுறுத்தல்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை எதிர்த்து,டெல்லியில் இரண்டு மாதங் களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, காங்கயம் நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் காங்கயத்தில் நடந்தது.

காங்கயம் நகரத் தலைவர் சிபக்கத்துல்லா, வடக்கு வட்டாரத் தலைவர் முத்துசாமி, மாவட்ட துணைத் தலைவர் பண்டுபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ப.கோபி பேசினார். தொடர்ந்து வெள்ளகோவில் நகர, வட்டார நிர்வாகிகள் கூட்டம் நகரத் தலைவர் எஸ்.எம்.ரவி, வெள்ளக்கோவில் தெற்கு வட்டாரத் தலைவர் எஸ்.கே.ஆர்.நடராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொடர்ந்து துணை நிற்கவேண்டும். பாஜக அரசு கொண்டுவந்துள்ள, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அதுவரை, விவசாயிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என மேற்கண்ட கூட்டங்களில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in